சுமார் 7.5 மில்லியன் பெறுமதியான போதைபொருளுடன் சிக்கிய நபர்கள்!



ஐஸ் போதைபொருளுடன்  கைது செய்யப்பட்ட 2 கடற்படை அதிகாரிகள் உட்பட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு அலுத்கடை நிதவான் நீதிமன்றம்   உத்தரவு பிறப்பித்துள்ளது.

510 கிராம் ஐஸ் போதைபொருளுடன் குறித்த நபர்கள் முல்லேரியா பொலிஸாரால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைபொருட்களின் பெறுமதி சுமார் 7.5 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Previous Post Next Post